Wednesday 7 October 2015

இனிமை.

இனிமை



இனிமை இனி மேல் என்னும் போது

இனிமேலுமா என்று அலறுவது

இனிமையா ?இனிமேல் என்பதாலா?
திகட்டாத இனிமை வேண்டும்
நெய் வழியாத இனிமை வேண்டும்
கலர் கவர்ச்சி இல்லாத இனிமை வேண்டும்
கைகாசை கடிக்காத இனிமை வேண்டும்.
எண்ணெயில் சுடாத இனிமை வேண்டும்
பெரும் முயற்ச்சி தேவைப்படாத இனிமை வேண்டும்
அவ்வப்போது மட்டும் தித்திக்காத இனிமை வேண்டும்
பிறகு சிறிது தேன் கேட்காத இனிமை வேண்டும்
எறும்பு வந்து பங்கு கேட்காத இனிமை வேண்டும்
கண் பட்டாலும் வரும் என்ற பதம் உள்ள இனிமை வேண்டும்.
மொத்தத்தில் இனிமைக்கு ஏதுவான இனிமை வேண்டும்.
எனக்குள் உள்ள இனிமைக்கு வெளியே எதற்கு ஓர் இனிமை தேடல்
என்ற பத்திய பக்குவம் உள்ள இனிமையே இனிமேல்


இனிமை.

No comments:

Post a Comment